tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் ஒரு பேரழிவு...

இன்று உலகச் சுற்றுச்சூழல் தினம். கோடிக்கணக்கான கோள்களுக்கு மத்தியில், உயிரினங்கள் வாழும் ஒரே கோள் பூமிமட்டும்தான். வேற்றுகிரக வாசிகள், பறக்கும் தட்டு என்று காமிக்ஸ் கதைகளைத்தவிர, எந்த உலக விஞ்ஞானிகளும் பூமிபோன்ற வேறு  ஒரு கோளை இந்த நிமிடம்வரை உறுதி செய்யவில்லை. ஆனால்,பூமியைப் புண்ணாக்கும் அனைத்து அழிவு களையும் போட்டிபோட்டு புகுத்துகின்றனர் லாபவெறிபிடித்த இயற்கையின் எதிரிகள்.மண்ணை நேசிப்போம், மக்களைக் காப்போம் என்ற முழக்கத்தோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஜுன் 5முதல் 10-ஆம் தேதி வரை பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்கிறது. ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் என்றால்என்ன? இந்த திட்டத்தை மக்கள் எதிர்ப்பதற் கான காரணங்கள் என்ன? என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

6000 அடி ஆழ்துளையிட்டு...

கார்பன் மற்றும் ஹைட்ரஜனை மட்டும் உள்ளடக்கியது ஹைட்ரோ கார்பன். இந்த ஹைட்ரோ கார்பன்கள் ஆக்சிஜன் உதவியோடு எரிபொருளாக பயன்படுகிறது. பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, நாஃப்தா, ஷேல் எரிவாயு போன்றவற்றின் ஒட்டுமொத்த வடிவமேஹைட்ரோ கார்பன்கள் தான். பூமிக்கடியில் இந்த ஹைட்ரோ கார்பன்கள் புதைந்திருப்பதாக கண்டறியப்பட்ட 31 இடங்களில் தமிழகத்தில் நெடுவாசலும் ஒன்று.நெடுவாசலில் கடந்த 2006-ஆம் ஆண்டே இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. நெடுவாசலை மையமாகக்கொண்டு வடகாடு, வானக்கண்காடு, கோட்டைக்காடு, கருக்காக் குறிச்சி ஆகிய ஊர்களில் துளையிட்டு ஆய்வுப்பணிகள் நடந்திருக்கின்றன.இந்த திட்டத்தில் 6,000 அடிக்கு ஆழ்துளை யிட்டு பூமிக்கடியில் இருக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுகிறது. இதற்காக படிப்படியாக ஒவ்வொரு கட்டங்களாக ஆழ்துளை யிடப்படும். இதன் காரணமாக கடல் நீர் உட்புகும்வாய்ப்புகள் மிக அதிகம் என்பதே இந்த கிராம மக்களின் அச்சம்.

21 லட்சம் ஏக்கர் உப்பு நிலமாக மாறும்
 

இதன் காரணமாக 21 லட்சம் ஏக்கர் நிலம், உப்பு நிலமாக மாறிவிடக்கூடிய சாத்தியங்கள் மிக அதிகம் உள்ளது என்கிறார்கள் இப்பகுதி மக்கள். இதனால் நெடுவாசலை சுற்றி 100 கிலோமீட்டர் சுற்றளவில் வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்ததிட்டத்தை கைவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.பல வருடகாலமாக தண்ணீரில்லாமல் பொய்த்துக் கிடக்கும் வறண்ட டெல்டா விவசாயமாவட்டங்களான தஞ்சைக்கும் புதுக்கோட்டை க்கும் நடுவே இருக்கிறது இந்த கிராமம். வறட்சிகளில் தப்பிப் பிழைத்து இதன் பசுமை மட்டும் அப்படியே எஞ்சி இருக்கிறது. இந்த கிராமத்தைச் சுற்றி இருக்கும் பல ஏக்கர் பரப்பி லான தென்னந்தோப்புகளில் இருந்துதான் சென்னைக்கு பல மூட்டைத் தேங்காய்கள் தினமும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.சகமனிதர்களைக் காப்பாற்றவே நேரமில் லாத நமக்கு நெடுவாசலின் பசுமையும் அது ஏன்காப்பாற்றப்பட வேண்டும் என்பதும் தேவையற்றதாக இருக்கலாம். ஆன்லைனில் காலம் தள்ளும்கார்ப்பரேட் குடிமகன்களுக்கு தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது என்று தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சுமார்6000 பேர் வசிக்கும் அந்த நெடுவாசல் நிலங்களில்ஒவ்வொரு ஏக்கரும் தற்போது குறைந்தபட்சம் 40 மூட்டை விகிதம் நெல்விளைச்சலைத் தருகின்றன. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் வருடாந்திர ஜீவனாம்சத்திற்கு போதுமானது அது. ஏற்கெனவே மக்களுக்கு நல்ல முறையில் பயன்பட்டு வரும் வேளாண் நிலத்தில்தான் தற்போது இயற்கை எரிவாயுக்களை நிலத்தின் ஆழத்திலிருந்து உறிஞ்சி எடுப்பதற்காக மத்திய அரசு தற்போதுதனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

80லட்சம் லிட்டர் தண்ணீர்...
ஹைட்ரோ கார்பன் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? என்பதை தொடர்ந்து பார்ப்போம்.  இயற்கை எரிவாயுவை பூமியில் இருந்து எடுக்கும் முறையை ஹைட்ராலிக் ஃபிராக்சூரிங்அல்லது ஃபிராக்கிங் என அழைக்கின்றனர். பூமிக்கு அடியில் இருந்து இயற்கை எரிவாயுஎடுக்கப்படுகிறது. இதற்காக பூமிக்கு அடியில் இருக்கும் நீர், மணல் மற்றும் இரசாயனம் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். 1940களில் இருந்து ஃபிராக்கிங் வழிமுறை அறியப்படுகிறது. எனினும் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டுமே ஃபிராக்கிங் வழிமுறை மிகவும் பிரபலமாக மாறியுள்ளது. குறிப்பாக இந்த வழிமுறை அமெரிக்காவில் மட்டும் அதிக பிரபலமாகியுள்ளது.
 

ஃபிராக்கிங் எவ்வாறு வேலை செய்கிறது?

முதலில் பூமியினுள் சுமார் 4000 அடி வரை துளையிடப்படுகிறது. பின் குறிப்பிட்ட ஆழத்தில் பாறையில் கிடைமட்டமாக துளையிடப்படுகிறது.   அதன் பின் ஃபிராக்கிங் திரவம் அதிக திறனுள்ள பம்ப்களின் உதவியோடு பாறைகளி னுள் பாய்ச்சப்படுகிறது. இந்த திரவத்திற்கு சுமார்80 லட்சம் லிட்டர் அளவிலான நீர் பயன்படுத்தப் படுகிறது. இந்த அளவு நீரை சுமார் 65,000 பேர் பயன்படுத்த முடியும். அத்துடன் பல்லாயிரம் டன் மணல் மற்றும் 2,00,000 லிட்டர் இரசாயனங்கள் தேவைப்படுகின்றன.இவை பூமிக்கடியில் ஏற்படுத்தப்பட்ட துளையினுள் இருக்கும் பாறைகளில் ஊடுருவி அதிகளவிலான சிறு சிறு விரிசல்களை ஏற்படுத்துகிறது. மணல் இந்த விரிசல்களை மீண்டும் மூடாமல் பார்த்துக் கொள்கிறது.  மேலும் இரசாயனங்கள் பல்வேறு வேலை களை பாறைகளில் மேற்கொள்கின்றன. அவை நீரை சுருங்கச் செய்து, கிருமிகளை அழித்து,கனிமங்களை கலைத்து விடும். அடுத்து பெரும்பாலான இரசாயனங்கள் வெளியேற்றப் படுகின்றன. இதன் பின்புதான் இயற்கை எரிவாயுவினை எடுக்க முடியும். இயற்கை எரிவாயுவினை முழுமையாக எடுத்துவிட்ட பின் பூமியினுள் இடப்பட்ட துளை முழுமையாக அடைக்கப்பட்டு விடுகிறது. இத்துடன் மீண்டும் இரசாயனங்கள் செலுத்தப்பட்டு அதன் மூலம் துளையடைக்கப்படுகிறது. 

சுத்தம் செய்யப்பட முடியாத குடிநீர்...
 

இத்தனையும் மேற்கொள்ளப்பட்ட பின் ஃபிராக்கிங் வழிமுறை பல்வேறு இதர பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. முதலில்ஃபிராக்கிங் மூலம் குடிநீர் மாசுபடுத்தப்படு கிறது. அதிகளவு சுத்தமான நீரை பயன்படுத்துவதோடு மட்டுமின்றி அதே அளவு நீர் மாசுபடுத்த ப்படுவதோடு இவை மிகவும் நச்சுத்  தன்மை வாய்ந்தது ஆகும். இவ்வாறு மாசுபடுத்தப் படும் சுத்தமான குடிநீரை எவ்வித வழி முறையை கொண்டும் சுத்தம் செய்ய முடியாது.ஃபிராக்கிங்கின் மற்றொரு தீமை இவை வெளியிடும் வாயுக்கள் தான். பெரும்பாலும் இவை மீத்தேன் எனும் வாயுவினை அதிகம் வெளிப்படுத்துகிறது. மீத்தேன் வாயுவானது கார்பன் டை ஆக்சைடு எனப்படும் வாயுவை விட 25சதவீதம் அதிக நச்சு கொண்டதாகும்.அதோடு வேதாந்தா போன்ற நிறுவனங்கள் லாபவெறி மட்டுமே நோக்கமாக கொண்டது. இதில் எந்த விதிமுறைகளையும் பின்பற்றமாட் டார்கள். விதிமீறல்களால் மோசமான விளைவு களை சந்திக்க நேரிடும்.மேலும், விவசாயம் நலிந்து வரும் சூழலில்விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கா மலும், விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்காமலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை துவக்குவது சுமார் 50,000 ஏக்கர் விவசாய நிலத்தை பாதிக்கும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் இப்பகுதி மக்களுக்கு எந்தவித பயனும்இல்லை. மாறாக நீராதாரத்தை மென்மேலும் சுரண்டுவதற்கும், விவசாயம் முடங்குவதற்கும், மக்களின் வாழ்வாதாரத்தை முடக்குவதற்கும், சுற்றுச்சூழல் கேட்டிற்குமே வழிவகுக்கும். உயிரினங்கள் வாழத்தகுதியான சூழலை அழித்துவிட்டு வரும் இந்த திட்டம் வேண்டாம்! வேண்டவே வேண்டாம்!!மக்களைச் சந்திப்போம், ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக கைகோர்ப்போம்.